பிறந்த குழந்தையை
காட்டினார்
செவிலி!
அரைக்கண்
மலர
என்னைப்
பார்த்து,
இதழ்களை
லேசாய்
அசைத்தது
அது!
முறுவலா?
முகச்சுழிப்பா?
ரோஜா
மேனி,
செம்பஞ்சுப்
பாதங்கள்!
தொட்டுப்
பார்க்க
துடித்தது
மனம்!
பாவத்தின்
நிழல்
பட்டுவிட்டால்?
புனிதம்
கெட்டுவிட்டால்?
14/04/21 -லினிரா
No comments:
Post a Comment