|
கட்டெறும்பும், நானும்!
படுக்கப்
போனேன்!
கட்டிலுக்கருகில்
கட்டெறும்பு
ஒன்று!
உயிர்ப்பயம்
உந்த,
அறிவு
ஆணை இட்டது:
"உடனே
நசுக்கு!"
மனம்
மன்றாடியது:
"உன்னைப்
போல்
அதுவும்
ஓர் ஜீவன்!
உலகில்
உயிர் வாழ
உனக்குள்ள
உரிமை
அதற்கில்லையா?"
மனதின்
இடி தாங்காது,
கட்டெறும்புக்குக்
கொடுத்தேன்
கடவுச்சீட்டு!
நடு
நிசி!
விழித்துக்
கொண்டேன்!
அறிவுப்
பேய்
தலைவிரித்தாடி
என்
தூக்கம் குடித்தது:
"முட்டாள்!
உறக்கத்தில்
கட்டெறும்பு
கடித்தால்..."
-ப.ராம்கோபால்10/07/21
|

|
ReplyForward
|
|
|
No comments:
Post a Comment