Friday, August 6, 2021

 

கிழித்து….

“கிழித்துவிடவா?” என்றேன்,

“கிழித்துவிடேன்!” என்றது:

“எரித்துவிடவா?” என்றேன்,

“எரித்துவிடு!” என்றது!

“குப்பைத் தொட்டியில்

வீசிவிடவா?” என்றேன்,

“பார்த்துப்போடு மக்கும் குப்பைத் தொட்டியில்!

மாட்டிக்கொள்ளப் போகிறாய் என்றது!”

”எதற்கு இப்படி” என்றது அது!

“வாரிசுகள் சலித்துக்கொண்டால்..…”

“இதற்கா இப்படிக் கவலை?

என்னையும் நண்பர்களையும்

எடைக்குப் போட்டுவிடு!

வரும் பணத்தில்

வாரிசுகளுக்கு பங்கு!”

சொல்லிவிட்டு,

படபடப்புடன் தன்னை மூடிக் கொண்டது

என் மடியிலிருந்த புத்தகம்!

    ---லினிரா 

No comments:

Post a Comment