Saturday, June 5, 2021

 

         

வீட்டில் கால் தரிக்காமல்

வீட்டில் கால் தரிக்காமல்

ஊர் சுற்றிச்சுற்றி வந்தோம்

உலக வம்பெல்லாம்

உடுத்தி மகிழ்ந்தோம்!

சொல்லெல்லாம் செல்லாகவே போன

மக்களைக் கண்டுமறுகினோம்;

கையிலிருக்கும் செல்லைக்

கண்களால் கைது செய்த,

பேரன் பேத்திகளை, என் செய்வது

எனத் தெரியாமல் திகைத்தோம்!

எப்போதாவது கரம் பிடித்தவள்

செவியோரம் செல்லை கொண்டு போனாலே

சுட்டெரித்தோம் பார்வையால்!

இன்றோ

செல்லே கதியென்று

நாம் கிடக்க,

நம்மைப் பார்த்து விதி சிரிக்கிறது:

"பிறர்க்கின்னா முற்பகல் எண்ணின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்!"

                           -  லினிரா