Friday, July 16, 2021

 

கட்டெறும்பும், நானும்!

படுக்கப் போனேன்!
கட்டிலுக்கருகில்
கட்டெறும்பு ஒன்று!
உயிர்ப்பயம் உந்த,
அறிவு ஆணை இட்டது:
"
உடனே நசுக்கு!"
மனம் மன்றாடியது:
"
உன்னைப் போல்
அதுவும் ஓர் ஜீவன்!
உலகில் உயிர் வாழ
உனக்குள்ள உரிமை
அதற்கில்லையா?"
மனதின் இடி தாங்காது,
கட்டெறும்புக்குக்
கொடுத்தேன் கடவுச்சீட்டு!
நடு நிசி!
விழித்துக் கொண்டேன்!
அறிவுப் பேய்
தலைவிரித்தாடி
என் தூக்கம் குடித்தது:
"
முட்டாள்! உறக்கத்தில்
கட்டெறும்பு கடித்தால்..."
       -
ப.ராம்கோபால்10/07/21 

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/no_photo.png

ReplyForward

 

 

 

காரும், கால்களும்!

காரிலிருந்து
இறங்கிய சீமாட்டி
சாலையோர
செருப்புத் தைப்பவனிடம்
சென்றாள்!
ஐந்து ரூபாய் கேட்டவனிடம்
இரண்டு ரூபாய்
பேரம் பேசி
செருப்பை சீர் செய்து கொண்டு
இறுமாப்புடன் நடந்து போனாள்!
அவள் கொடுத்ததோ
இரண்டு ஓற்றை நாணயங்கள்!
அதிலொன்று கருங்கருப்பு!
அவள் சென்ற பின்,
நான் அவனிடம் சென்றேன்,
என் செருப்பை சீர் செய்ய!
பத்து ரூபாய் கேட்டவனிடம்
"கொஞ்சம் குறைத்துக் கொள்!"
எனக் கூச்சத்துடன் கேட்டேன்!
"முடியாது!" எனச் சொல்லி
முறைத்தவனிடம்,
காலணியைக் கொடுத்தேன், காணும் வழி வேறின்றி!
தையலுக்கோ நான்கு தையல்!
எனக்கோ
  இரண்டுதான்!
என்னிடம் இருப்பது
கால்கள்தானே!
காரல்லவே!
      -ப. ராம்கோபால் 17/07/21 

ReplyForward