Thursday, April 20, 2023

 




பரணி பாட வாரீர்!  

அன்புமிக்க

   இனிய நண்பர்களே!

இந்த புத்தகங்கள்

வரிகள்

நிறைந்த புத்தகங்களல்ல!

இவை,

வலிகள் நிரம்பி வழியும் புத்தகங்கள்!

   நீங்களும், நானும், நம்மில் பலரும் ஒரு சுகக் கூட்டிற்குள்,

சொகுசு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, வாழ்க்கையை

அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்!

  இதற்கெல்லாம் யார் காரணம்? நிச்சயமாக, நம் உழைப்பு மட்டுமே காரணம் அல்ல!

  வயதான பெற்றோரையும், இளம் மனைவியரையும், பச்சிளம் குழந்தைகளையும், சின்னஞ்சிறு சிறார்களையும், திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் சகோதரிகளையும் சொந்த ஊரில் விட்டுவிட்டு,

பனிபடர்ந்த சிகரங்கள் மீதும், அடர்ந்த காடுகளிலும், ஆழ் கடலிலும்,

அளவற்ற வான் பரப்பிலும், கடமையே கண்ணாக, எந்நேரமும், கண் துஞ்சாமல்,

காவல் காத்து நிற்கும் நம் முப்படை வீரர்கள்தான் முழு முதற் காரணம்!

  அவர்களின், கடமை என்ற வேள்வித் தீயில் தான் நாம்

"குளிர் காய்ந்து" கொண்டிருக்கிறோம்!

  அந்த வீரர்களின் துப்பாக்கிகள் சுடவில்லையெனில், இங்கே நீங்களும், நானும், நம் பிள்ளைகளும் "சுய படங்கள்" சுட்டுக் கொண்டிருக்க முடியாது!

  இந்தப் புத்தகங்கள் சொல்லும் கதைகள் சிலதான்! இன்னும் சொல்லப்பட வேண்டிய, பரணி பாடப்படாத, வீரர்களின் கதைகள் ஏராளம்!

  இப்படிப்பட்ட வீரர்களுக்கு,

 தன் குடும்பத்தையும், இன்னுயிரையும்  துச்சமாக மதித்து, நாட்டிற்காக-நமக்காக, உயிர்த்தியாகம் செய்ய எந்நேரமும் துடித்துக் கொண்டிருக்கும் அந்த முகம்

தெரியா வீரர்களுக்கு, நாம் நன்றி சொல்ல வேண்டாமா?

ந்த செய்நன்றிக் கடன் தீர்க்க, சிறந்த வழி  இந்தப் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிப்பதன்றி வேறு எதுவாக இருக்க முடியும்அது மட்டுல்ல, இப்படிப்பட்ட வீரர்கள் பற்றி நம் பிள்ளைகளையும், பேரன்,பேத்திகளையும் அறிந்து கொள்ளச் செய்வது நம் தலையாய கடமை அல்லவா?

  நண்பர்களே, புத்தகத்தை வாங்குங்கள்! வாசியுங்கள்!

அவைகளைப் பற்றி நண்பர்களிடம் பேசுங்கள்! அவர்களையும்

வாங்கச் சொல்லி வற்புறுத்துங்கள்! திருமண விழாக்களில் அவற்றைப்

பரிசாகக் கொடுங்கள்! உங்களால் முடிந்தவரை, நம் வீரர்தம் தியாகத்தின் மாண்பை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லுங்கள்!

 அவர் தம் பரணி பாடுங்கள்!     

 வாழ்க்கையின் மதிப்பீடுகள் மக்கிப் போய்க் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இப்படிப்பட்ட புத்தகங்களே, வாழ்க்கைக்கு வழிகாட்டும், 

வாழ்க்கையின் உன்னதத்தை உணர்த்தும், கைவிளக்கு!

  இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க நான் முதன் முதலில் வாசித்த போது என் கண்கள் கசிந்தன!  "இப்படியெல்லாம்கூட

நடக்குமா?" என்று திகைத்துப் போயிருக்கிறேன், பல இடங்களில்!

தமிழ் கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பார்த்த என் மனைவியும் கண் கலங்கினார்!

 நீங்கள் வாசித்தால், உங்கள் உள்ளமும் உருகும்! கண்களும் கசியும், சந்தேகமில்லாமல்!

  இந்தப் புத்தகத்தை நான் மொழி பெயர்த்தது, என் வாழ்க்கையில் எனக்குக்

கிடைத்த அரிய வாய்ப்பு! இந்த வைர வாய்ப்பினை  வழங்கிய சென்னை, "ஜீரோ டிகிரி பப்ளிஷிங்" பங்குதாரரகளான திரு. ராம்ஜி அவர்களுக்கும், திருமதி.காயத்ரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,

.ராம்கோபால் (லினிரா) அ.பேசி எண்: 9965412116.  21/04/23 கோவை-46.

 

குறிப்பு: ஜீரோ டிகிரி பப்ளிஷிங், சென்னை.

அ.பேசி எண்: 96001 95441